ஆறேழு பேர் கொண்ட குடும்பம் காரில் பயணிக்கிறார்கள்.
அப்போது திடீரென பெய்யும் பெருமழையில் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்குகிறது.
விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அந்த இரவில் அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்க நேரிடுகிறது...
பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கையில் கீழிருந்து ஒருகுழந்தையின் அழுகுரலும் விசும்பலும் கேட்கத்தொடங்குகிறது.
அங்குள்ள பெரியவரிடம் கேட்கையில் உரியமுறையில் பதிலில்லை.
அந்த வீட்டின் அண்டர்கிரவுண்டிலுள்ள ஒரு குழந்தையை காப்பாற்றி வெளிக்கொண்டுவருகிறார்கள்.
அதன்பிறகு அமானுஷ்யமான பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன...
இவர்களில் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.
கொல்லப்பட்டவர்கள் பேயாக மாறி மற்றவர்களையும் கொல்லத்தொடங்க... இவர்களில் யார் எப்படி உயிரோடு தப்பி அந்த வீட்டிலிருந்து வெளிவருகிறார்கள் என்பதே கதை.
ஒரு சாதரண கதையை தேர்ந்தெடுத்து அதை படமாக்கிய விதத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக அந்த வீட்டினை காட்சிப்படுத்தியுள்ள விதம்...
கலை இயக்குநரின் நேர்த்தி அருமை.
படம் தொடங்கி சிறிது நேரத்தில் பெய்யத்தொடங்கும் மழை இறுதிவரை பெய்வது...
வீட்டிற்குள் இருந்தாலும் சத்தத்திலேயே மழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதை இசையால் உணர்த்தி அதை படத்தின் விறுவிறுப்புக்கு பயன்படுத்தியுள்ள
விதம் அருமை.
நடித்துள்ள ஒவ்வொருவருமே பாத்திரத்தின் தன்மை உணர்ந்து செய்திருப்பது சிறப்பு.
குறிப்பாக நாயகியாக நடித்துள்ள ஷோபியா மைல்ஸ் பயப்படும் காட்சிகளில் தனது முகபாவனைகளால் கவர்கிறார்.
இயக்குநர் விக்டர் கார்சியா ( Return to House on Haunted Hill 2007 & Mirrors 2 2010 ) முந்தைய படங்களைவிடவும் இப்படத்தை கூடுதல் கவனத்துடன் இயக்கியுள்ளது தெரிகிறது.
எழுதி இசையமைத்துள்ளவர் Richard D'Ovidio
ஒளிப்பதிவாளர் Alejandro Moreno வின் பங்களிப்பு அருமை.
அதிலும் 3D காட்சிகளை படமாக்கியுள்ள விதம் அபாரம். மொத்தத்தில் 2D யில் பார்ப்போருக்கு ஒரு முறை பார்த்து ரசிக்கும் விதத்திலும்...3D பார்ப்போருக்கு பிடித்தமானதாகவும் இருக்கிறது இப்படம்.